சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் ஆர் கழலே தொழுவீர்! பண் - இந்தளம் (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uzsrRh3l5c0 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.036  
சீர் ஆர் கழலே தொழுவீர்!
பண் - இந்தளம் (திருத்தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி) ; (திருத்தலம் அருள்தரு ஏலவார்குழலம்மை உடனுறை அருள்மிகு காசியாரண்ணியேசுவரர் திருவடிகள் போற்றி )
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர் வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி, ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே? | [1] |
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி, எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே? | [2] |
அன்பால் அடி கைதொழுவீர்! அறிவீரே மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி, இன்புஆய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன் பொன் போல் சடையில் புனல் வைத்த பொரு | [3] |
நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர் கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி, இச்சித்து, இரும்பூளை இடம்கொண்ட ஈசன் உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே? | [4] |
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர் நல் தாழ்குழல் நங்கையொடும் உடன் ஆகி, எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் புற்று ஆடு அரவோடு பூண்ட பொரு | [5] |
தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர் சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி, ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே? | [6] |
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது சொல்லீர் பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும் இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே? | [8] |
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர் கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன் ஆகி, இயல்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே? | [9] |
துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்! சொல்லீர் பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன் ஆகி, இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே? | [10] |
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன், சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார், பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே. | [11] |